Last Updated : 18 Apr, 2017 10:18 AM

 

Published : 18 Apr 2017 10:18 AM
Last Updated : 18 Apr 2017 10:18 AM

மோசமாக விளையாடினால் வெற்றி பெறுவதற்கான தகுதியை பெறமுடியாது: விராட் கோலி விரக்தி

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 27 ரன்கள் வித்தி யாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

ராகுல் திரிபாதி 31, ரஹானே 30, தோனி 28, ஸ்மித் 27 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் மனோஜ் திவாரி 11 பந்துகளில் 27 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோர் உயர உதவினார். 162 ரன்கள் இலக் குடன் பேட் செய்த பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 29, விராட் கோலி 28 ரன்கள் சேர்த்தனர். இதனால் புனே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனே தரப்பில் ஷர்துல் தாக்குர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

பெங்களூரு அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. 5 ஆட்டத்தில் அந்த அணி ஒரு வெற்றி மட்டும் பெற்றுள்ளது. அதேவேளையில் புனே அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி 5 ஆட்டத்தில் 3 தோல்விகளைப் பெற்றுள்ளது.

தோல்வி குறித்து விராட் கோலி கூறும்போது, “இதேபோன்று நாங்கள் விளையாடினால், வெற்றி பெற தகுதியானவர்களாக இருக்க முடியாது. கடந்த ஆட்டத்தில் நாங்கள் போராடினோம். ஆனால் இந்த ஆட்டம் எங்கள் கண்முன்னே எங்களை விட்டு கைநழுவி சென் றது. சில விஷயங்களைச் செயல் படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

கடந்த சீசனில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தோம். ஆனால் ஒவ்வொரு முறையும் இது நடைபெறாது. தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக, ஒரு அணிக்காக ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் போது இதுபோன்ற ஒரு ஆட் டத்தை விளையாடக்கூடாது. வீரர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என்ற நம் பிக்கை உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x