Last Updated : 31 Jan, 2017 09:00 AM

 

Published : 31 Jan 2017 09:00 AM
Last Updated : 31 Jan 2017 09:00 AM

ஆஸி.யை எளிதாக நினைக்கக்கூடாது: சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் பிப்ரவரி 23-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் படுதோல்வியை சந்தித்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் கடும் ஆதிக்கம் செலுத்தியது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, எதிரணியின் திறமையை எப்போதும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆஸ்திரேலிய அணி வலுவானது.

இந்திய சூழ்நிலையில் அவர்கள் விளையாடுவது கடினம்தான். இது உண்மையே. இந்த கருத்தை ஆஸ்திரேலிய வீரர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர், இந்திய அணிக்கு கிடைத்துள்ள சிறந்த பாராட்டாகவே இதை கருதுகிறேன். அவர்கள் வழியில் அவர்கள் விளையாடும் போது எதையும் சாதகமாக கருதமுடியாது.

இந்திய அணி சிறந்த முறையில் திறமைக்கு தகுந்தபடி தயாராகும் என்பதில் எனக்கு எந்வித சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலிய அணியை கையாள்வது எப்போதும் கடினம். இப்போதும் அதுபோன்றே இருக்கும். எனினும் இந்திய அணியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x