Published : 22 Mar 2017 10:11 AM
Last Updated : 22 Mar 2017 10:11 AM
தியோதர் டிராபி தொடருக்கான இந்தியா புளூ அணிக்கு ரோஹித் சர்மாவும், இந்தியா ரெட் அணிக்கு பார்த்தீவ் படேலும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தியோதர் டிராபி தொடர் வருகிற 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் விஜய் ஹசாரே கோப்பையை வென்ற தமிழகம் 3-வது அணியாக கலந்து கொள்கிறது.
இந்த தொடரில் தோனி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சுரேஷ் ரெய்னா சேர்க் கப்பட்டுள்ளார். 3 அணிகளிலும் விக்கெட் கீப்பர்களாக பார்த்தீவ் படேல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் செயல்பட உள்ளனர்.
விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக பந்து வீசிய சீனியர் வீரரான ஹர்பஜன் சிங், இந்தியா புளூ அணியில் இடம் பிடித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில் கொண்டு தியோதர் டிராபியில் ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT