Published : 10 Mar 2017 09:36 AM
Last Updated : 10 Mar 2017 09:36 AM

கால் இறுதியில் சிந்து

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், 6-ம் நிலை வீராங்கனையுமான சிந்து தனது 2-வது சுற்றில் 39-ம் நிலை வீராங்கனையான இந்தோனேஷியாவை சேர்ந்த தினார் தயா ஆஸ்டினை எதிர்த்து விளையாடினார்.

இதில் சிந்து 21-12, 21-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 30 நிமிடங்களில் முடிவடைந்தது. முன்னதாக சிந்து தனது முதல் சுற்றில் டென்மார்க்கின் மெட்டி பவுல்செனை 21-10, 21-11 என்ற நேர் செட்டில் வீழ்த்தியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x