Last Updated : 07 Apr, 2017 10:33 AM

 

Published : 07 Apr 2017 10:33 AM
Last Updated : 07 Apr 2017 10:33 AM

இறுதிப் போட்டியில் ஷியாம் குமார்

தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷியாம் குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பாங்காக்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 49 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஷியாம் குமார் மங்கோலியாவின் கார் எர்டினை வீழ்த்தினார். ஷியாம் குமார் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் டஸ்மட்டோவை எதிர்த்து விளையாடுகிறார்.

மற்றொரு இந்திய வீரரான ரோஹித் தோகாஸ் 64 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் உஸ் பெகிஸ்தானின் அதுர்ரை மோவிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x