Published : 09 Aug 2016 03:57 PM
Last Updated : 09 Aug 2016 03:57 PM
பரிந்துரைத்த சீர்த்திருத்தங்களை அக்டோபர் 15-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி பிசிசிஐ-க்கு இறுதிக்கெடு நிர்ணயித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 25-ம் தேதி வாக்கில் உடன்பாட்டு அறிக்கையையும் சமர்ப்பிக்க லோதா கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
பிசிசிஐ நிர்வாகிகளுக்கு வயது வரம்பு 70, வாரியத்தில் அரசியல்வாதிகள் இடம்பெறுதல் கூடாது, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி கூடாது, மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு ஒரு வாக்கு போன்ற சீர்த்திருத்தங்களை லோதா கமிட்டி பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் இந்தப் பரிந்துரைகளை ஏற்று பிசிசிஐ இதனை நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, உச்ச நீதிமன்றம் மீதும் லோதா கமிட்டி பரிந்துரைகள் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
பிசிசிஐ-யை சுத்தப்படுத்தும் நோக்கம் நல்லதே ஆனால் ‘சட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு’ இதனை செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பிசிசிஐ-க்கு இறுதிக் கெடு நிர்ணயித்துள்ளது லோதா கமிட்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT