Published : 05 Sep 2018 09:10 AM
Last Updated : 05 Sep 2018 09:10 AM

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் இந்தியாவின் மிதர்வால்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் தங்கப் பதக்கம் வென் றார்.

தென் கொரியாவின் சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப் பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் மிதர்வால் 564 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். 23 வயதான மிதர்வால் உலகக் கோப்பை தொடரில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். செர்பியாவின் தமிர் மைக் 562 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் டாம்யுங் லீ 560 புள்ளிகளுடன் வெண்கலப் பதக் கமும் கைப்பற்றினர். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான ஜித்து ராய் 552 புள்ளிகளுடன் 17-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

50 மீட்டர் பிஸ்டல் அணி கள் பிரிவில் மிதர்வால், ஜித்து ராய், மன்ஜித் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1648 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித் தது. ஜூனியர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி, அபித்யா பாட்டில் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா வின் மனு பாகர், ஹீனா சித்து ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறத் தவறினர். மனு பாகர் தகுதி சுற்றில் 574 புள்ளிகளுடன் 13-வது இடமும், ஹீனா சித்து 571 புள்ளிகளுடன் 29-வது இடமும் பிடித்தனர். அணிகள் பிரிவில் மனு பாகர், ஹீனா சித்து, ஸ்வேதா சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1713 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்தது.23 வயதான மிதர்வால் உலகக் கோப்பை தொடரில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x