Published : 26 Sep 2018 12:38 PM
Last Updated : 26 Sep 2018 12:38 PM
ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், தோனி மற்றும் குல்தீப் யாதவ்வுக்கு இடையே நடந்த உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது. இந்தத் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது ஆப்கானிஸ்தான்.
அப்போது பந்து வீசிய குல்தீப் பீல்டிங்கில் சில மாற்றங்களை செய்யுமாறு தோனியிடம் கூறினார். ஆனால் தோனி அதனை மறுத்துவிட்டார்.
தொடர்ந்து தனது கருத்தை கூறிய குல்தீப்பிடம் தோனி, பவுலிங்க் பண்றியா ..இல்ல பவுலர மாத்தட்டுமா...? என்று கிண்டலாக கேட்பார்.
ஸ்டெம்புக்கு பின்னாலிருந்து தோனி கூறிய இந்த வார்த்தைகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரும் வீடியோ வடிவில் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு முன்னரும் மணிஷ் பாண்டேவுடன் பேட்டிங் செய்யும் போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணிஷ் பாண்டேவை தோனி, “இங்கே கவனி...அங்கே என்ன பார்த்துக் கொண்டிருகிறாய்? ” என்று கோபமாக கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT