Published : 24 Mar 2018 09:11 AM
Last Updated : 24 Mar 2018 09:11 AM

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றார் இந்திய வீரர் விவான் கபூர்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் டிராப் பிரிவில் இந்திய வீரர் விவான் கபூர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான டிராப் பிரிவு இறுதி சுற்றில் இத்தாலியின் மேட்டோ மாரானியு 39 புள்ளிகள் சேர்த்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் யில்யு ஓய்யாங் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இவர்கள் இருவரும் தலா 39 புள்ளிகள் சேர்த்ததால் டைபிரேக்கர் முறையில் இருவருக்கும் தலா இரு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இதில் மாரானியு இருமுறையும் காகிதப் புறாவை சுட்டு வீழ்த்தினார்.

அதேவேளையில் ஓய்யாங் ஒரு வாய்ப்பை தவறவிட்டார். இந்தியாவின் விவான் கபூர் 30 புள்ளிகள் சேர்த்து வெண்கலப்ப பதக்கம் வென்றார். இதே பிரிவில் அணிகளுக்கான போட்டியில் விவான் கபூர், லக்சய், அலி அமான் இலாகி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 328 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

சீன அணி 335 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், ஆஸ்திரேலிய அணி 331 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றன. இந்தத் தொடரில் இந்திய அணி பதக்கப்பட்டியலில் 2 தங்கம், 3 வெண்கலத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x