Published : 28 Mar 2019 08:30 AM
Last Updated : 28 Mar 2019 08:30 AM
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கம் வென்றது.
12 வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டி தைபேவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி இறுதி சுற்றில் 484.8 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது. கொரியாவின் ஹூவாங் சியோங்கன், கிம் மோஸ் ஜோடி 481.1 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கமும், தைபேவின் வூ சியா யிங்,கோ குவான் டிங் ஜோடி 413.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியது.
முன்னதாக தகுதி சுற்றில் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி 784 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்தது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் ரஷ்யாவின் விட்டலினா பட்சரஷ்கினா, ஆர்டெம் சேர்னோவ்சோவ் ஜோடி 782.34 புள்ளிகள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT