Published : 04 Sep 2014 11:54 AM
Last Updated : 04 Sep 2014 11:54 AM

ரயில்வே தடகளம்: தெற்கு மண்டலம் சாம்பியன்

80-வது அகில இந்திய ரயில்வே தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் தெற்கு மண்டலமும், மகளிர் பிரிவில் மத்திய மண்டலமும் சாம்பியன் ஆகின. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் மேற்கு மண்டல அணி 2-வது இடத்தைப் பிடித்தது.

சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி புதன்கிழமை நிறைவு பெற்றது. 44 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 374 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் கம்பு ஊன்றித் தாண்டுதல் வீராங்கனை சுரேகா தொடர்ந்து 11-வது ஆண்டாக தங்கப் பதக்கம் வென்றார். நிறைவு விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x