Published : 14 Dec 2018 07:56 AM
Last Updated : 14 Dec 2018 07:56 AM
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது.
இந்திய அணி தரப்பில் 12-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்தார்.
நெதர்லாந்து அணி தரப்பில் பிரிங்மான்15-வது நிமிடத்திலும், வான் டெர் வீர்டென் 50-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கடைசி கட்டத்தில் இந்திய அணி பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணடித்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த தோல்வியால் உலகக் கோப்பை தொடரில் 44 வருடங்களாக அரை இறுதிக்கு முன்னேற முடியாத இந்திய அணியின் சோகம் இம்முறையும் தொடர்கிறது. 15-ம் தேதி நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகளும் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT