Last Updated : 10 Oct, 2018 08:34 AM

 

Published : 10 Oct 2018 08:34 AM
Last Updated : 10 Oct 2018 08:34 AM

ஆசிய விளையாட்டு: இந்திய வீராங்கனை அசத்தல்

மூன்றாவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பியான் தங்கம் வென்று அசத்தல் சாதனை புரிந்துள்ளார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற கிளப் த்ரோ போட்டியின் எப்32/51 பிரிவில் இந்திய வீராங்கனை ஏக்தா 16.02 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இதே பிரிவில் ஐக்கிய அரபு அமீரக வீராங்கனை அல்காபி தேக்ரா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மோனு கன்காஸ் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். ஆண்கள் 200 மீட்டர் டி44/62/64 பிரிவில் இந்திய வீரர் ஆனந்தன் குணசேகரன் 3-வது இடத்தைக் கைப்பற்றி வெண்கலப் பதக் கத்தை வென்றார். ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் நர்வால் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

பெண்கள் 200 மீட்டர் ஓட்டத்தின் டி45/46/47 பிரிவில் இந்திய வீராங்கனை ஜெயந்தி பெஹரா 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

திங்கள்கிழமை நடைபெற்ற போட்டிகளில் மட்டும் இந்தியா 3 தங்கம் உட்பட 11 பதக்கங்களை வென்றது. நேற்றைய ஆட்டத்தின் போது 3 தங்கம் உட்பட 11 பதக்கங்களை இந்தியா கைப் பற்றியது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x