Published : 06 Jul 2018 09:11 AM
Last Updated : 06 Jul 2018 09:11 AM

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் விளையாட ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றார்.

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ரபேல் நடாலும், கஜகஸ்தானின் எம்.குக்குஷ்கின்னும் மோதினர். இதில் நடால் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் ஸ்லோவாக்கியாவின் லுகாஸ் லாக்கோவை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் மிலோஸ் ரயோனிச் 7-6 (4), 7-6 (4), 7-6 (4) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானைச் சாய்த்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பல்கேரிய வீராங்கனை டோமோவைத் தோற்கடித்தார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவா உள்ளிட்டோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனையும் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கரோலின் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ரஷ்ய வீராங்கனை மகரோவா 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை தோற்கடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x