Published : 02 Aug 2014 07:20 PM
Last Updated : 02 Aug 2014 07:20 PM
காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது இந்தியா.
நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதியில் 2 கோல்கள் பின் தங்கியிருந்த இந்தியா பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது.
நியூசிலாந்து அணியில் சைமன் சைல்ட், நிக் ஹெய்க் ஆகியோர் முதலில் கோல் அடித்து 2-0 என்று முன்னிலை கொடுத்தனர்.
அதன் பிறகு இந்தியா ஆவேசமாக ஆடியது. ஆகாஷ்தீப் சிங், ரமந்தீப் சிங், மற்றும் ருபிந்தர்பால் சிங் ஆகியோர் 3 கோல்களை அடிக்க நியூசிலாந்து அதிர்ச்சியடைந்தது.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை 4-1 என்று ஊதித்தள்ளி இறுதிக்குள் நுழைந்தது. நாளை இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
கேப்டன் சர்தார் சிங் இல்லாமலேயே இந்தியா சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. சர்தார் சிங் இந்தப் போட்டிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT