Published : 29 Mar 2018 07:26 PM
Last Updated : 29 Mar 2018 07:26 PM
2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குள் கோலாகலமாகப் புகுந்துள்ள தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 8 ஆண்டுகளில் காட்டிய ஆட்டத்தின் வேகத்தை மீண்டும் காட்ட தீவிரமாகியிருப்பதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
“சிஎஸ்கே முதல் 8 ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட்டில் செய்து காட்டியதை மீண்டும் செய்து காட்ட விரும்புகிறோம். எனக்கு எதிலும் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை, 8 ஆண்டுகளுக்கு முன்பாக நட்பு உருவான அதே ஹோட்டலில்தான் இப்போதும் தங்கியுள்ளேன். ஒரு அணியாக நிறைய வெற்றிகள். 10 ஆண்டுகள் ஒரு அணியுடன் நிறைய வரலாறைக் கொண்டது.
தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சென்னை மிகப்பெரிய பங்கு வகித்து வருகிறது. முதல் 8 ஆண்டுகளில் எங்களுக்கான சிறப்பு என்னவோ அதனை மீண்டும் திருப்பிச் செய்து காட்டுவது அவரது உறுதியில் உள்ளது, அவரது உத்வேகத்தில் தீவிரம் அடைந்துள்ள விஷயமாகும் இது.
எங்கள் இருவருக்கும் நல்ல நட்புறவு இருந்து வருகிறது.
முதல் போட்டி மும்பையுடன், எங்கள் இரு அணிகளுக்கிடையே சில சுவாரசியமான விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற்றுள்ளன. முரளி விஜய் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளமை நாங்கள் அனுபவத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
எனவே அனுபவமும் இளமையும் கலந்த அணிச்சேர்க்கை இருக்கும்.
ஸ்பின் பந்து வீச்சில் பலம் பொருந்தியிருக்கிறோம். இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மேலும் நன்னம்பிக்கை வைத்துள்ளோம். மார்க் உட், லுங்கி இங்கிடி உள்ளனர், இவர்களும் வலு சேர்ப்பார்கள்” என்றார் ஸ்டீபன் பிளெமிங்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT