Published : 02 Apr 2024 07:37 AM
Last Updated : 02 Apr 2024 07:37 AM

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு அபராதம்

ரிஷப் பந்த்

விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. அந்த அணிக்கு இந்த சீசனில் இது முதல் வெற்றியாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் பந்து வீச டெல்லி கேபிடல்ஸ் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x