Published : 14 Mar 2024 06:26 AM
Last Updated : 14 Mar 2024 06:26 AM

ரஞ்சி கோப்பை | விதர்பா வெற்றிக்கு 290 ரன் தேவை

கருண் நாயர்

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி நாளான இன்று விதர்பா அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு 290 ரன்கள் தேவையாக உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தபோட்டியில் மும்பை அணி முதல்இன்னிங்ஸில் 224 ரன்களும், விதர்பா அணி 105 ரன்களும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன்2-வது இன்னிங்ஸை விளையாடியமும்பை அணி 418 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முஷீர் கான் 136, அஜிங்க்ய ரஹானே 73, ஸ்ரேயஸ் ஐயர் 95 ரன்கள் எடுத்தனர்.

538 ரன்கள் இலக்குடன் பேட்செய்த விதர்பா அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 92 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. அதர்வாடைடே 32, துருவ் ஷோரே 28, அமன் மோகடே 32, யாஷ் ரத்தோட் 7 ரன்களில் நடையை கட்டினர். கருண் நாயர் 220 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் அக்ஷய் வத்கர் 56, ஹர்ஷ் துபே 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 290 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது விதர்பா அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x