Published : 16 Dec 2023 05:47 AM
Last Updated : 16 Dec 2023 05:47 AM

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20-ல் மே.இ.தீவுகள் வெற்றி

செயிண்ட் ஜார்ஜ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

செயிண்ட் ஜார்ஜில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 7 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரண்டன் கிங் 52 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசிஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரோவ்மன்பவல் 28 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ரஷித், தைமால் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

177 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சேம் கரண் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்தார். பில் சால்ட் 25, வில் ஜேக்ஸ் 24, மொயின் அலி 22, ஜாஸ் பட்லர் 5, ஹாரி புரூக் 5 ரன்கள் எடுத்தனர். அல்ஸாரி ஜோசப் 3, அகீல் ஹொசைன் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இந்த வெற்றியால் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x