Published : 04 Jan 2018 10:41 AM
Last Updated : 04 Jan 2018 10:41 AM
கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட ஷிகர் தவண் குணமடைந்து உடற் தகுதியை பெற்றுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட தொடக்க வீரரான ஷிகர் தவண் குணமடைந்து முதல் போட்டிக்கான தேர்வுக்கு உடற் தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜடேஜாவின் உடல் நிலையை கேப்டவுனில் உள்ள மருத்துவக்குழு உதவியுடன் பிசிசிஐ மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் ஜடேஜா முழுமையாக குணமடைந்துவிடுவார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அவர், இடம் பெறுவது குறித்து போட்டி தொடங்கும் அன்று காலையில் முடிவு செய்யப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT