Published : 14 Jan 2018 12:20 PM
Last Updated : 14 Jan 2018 12:20 PM

செஞ்சூரியனில் ரன் அடிக்கவில்லையெனில் கோலி தன்னையே நீக்கிக்கொள்ள வேண்டும்: சேவாக் அதிரடி

புவனேஷ்வர் குமாரை காரணமின்றி அணியிலிருந்து நீக்கிய இந்திய கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் ரன் அடிக்கவில்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்குத் தன்னைத்தானே நீக்கிக் கொள்வது உசிதம் என்று அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா டிவி-க்காக சேவாக் கூறியதாவது:

ஷிகர் தவண் ஒரு போட்டியில் தோல்வியடைந்ததற்காகவும், காரணமில்லாமல் புவனேஷ்வர் குமாரையும் கோலி நீக்கியதைப் பார்க்கும் போது செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் கோலி ரன் எடுக்கவில்லை என்றால் ஜோஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக் கொள்ள வேண்டும்.

இஷாந்த் சர்மாவை வேறு எந்த பவுலருக்குப் பதிலாகவும் சேர்த்திருக்கலாம், புவனேஷ்வர் குமார் கேப்டவுனில் அபாரமாக ஆடினார். அவரை உட்கார வைப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒரு செயல்.

இவ்வாறு சாடினார் சேவாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x