Published : 16 Dec 2017 10:39 AM
Last Updated : 16 Dec 2017 10:39 AM

சிந்துவுக்கு 3-வது வெற்றி

துபை சூப்பர் சீரிஸ் பைனல் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார்.

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள துபை சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் சீனாவின் பிங்க்ஜியோவையும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானின் சயகா சடோவையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார்.

இந்நிலையில் சிந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-9, 21-13 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x