Published : 31 Dec 2017 11:40 AM
Last Updated : 31 Dec 2017 11:40 AM
இந்திய அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மிகச்சிறந்த பேட்ஸ்மெனான ராகுல் திராவிட் தன் ஆட்டத்தினால் மட்டுமல்ல தன் பண்பினாலும் உலகம் முழுதும் பலரையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் வெள்ளியன்று நியூஸிலாந்துக்குச் செல்லும் விமானத்தில் இருவரும் ஒன்றாகப் பயணித்தனர். ஹபீஸ் திராவிட்டுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அதனைத் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வாசகங்களுடன் பதிவிட்டுள்ளார்: சுவர் என்று அழைக்கப்படும் மனிதரைச் சந்தித்தேன். திராவிட் சிறந்த மனிதர், எப்போதும் கிரிக்கெட் பற்றி ஆர்வத்துடன் பேசி நமக்கு உதவுபவர்.
அவருடன் இணைந்து ஆடியது பெருமைக்குரியது. எப்போதும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மொகமது ஹபீஸின் இந்த மனம்திறந்த பதிவுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் பதிவிட்ட் ட்விட்டர்கள் வருமாறு:
ரஷீத் ஷாகூர்: திராவிட் ஒரு கிரேட் கிரிக்கெட்டர், மிகப்பெரிய மனிதர். எளிமையானவர்.
எஸ்பி.கான்: விலைமதிப்பற்ற வீரர், மிகப்பெரிய மனிதர், அவரிடமிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பரூக் ஷமீர்: கிரிக்கெட்டின் அனைத்து கால மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் திராவிட்.
ஃபாஹிம் தரீன்: ராகுல் உண்மையான ஜெண்டில்மேன், மிகப்பரந்த குணாம்சம் அவருடையது.
அகிப் மன்சூர்: ஹபீஸ் பாய், திராவிட்டிடமிருந்து கொஞ்சம் பேட்டிங் டிப்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
யாசிர்: ஒரு பாகிஸ்தானியாக இருந்தாலும், எனக்குப் பிடித்த இந்திய வீரர் திராவிட். இவர் விக்கெட் மற்ற விக்கெட்டுகளை விட முக்கியமானது. மிகவும் திடமான வீரர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT