Published : 19 Dec 2017 04:50 PM
Last Updated : 19 Dec 2017 04:50 PM
கடினமான தென் ஆப்பிரிக்கா தொடருக்கு இந்திய அணி செல்லவிருக்கும் நிலையில் அங்கு எதுவும் எளிதாக இருக்காது என்று முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி எச்சரிக்கை மணி ஒலித்துள்ளார்.
மேலும் இந்திய அணி பயிற்சி ஆட்டம் எதிலும் ஆடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது, அதுவும் உயிரோட்டமுள்ள வேகப்பந்து சாதக ஆட்டக்களத்தில்.
இது குறித்து கங்குலி கூறியதாவது:
நிச்சயம் எதுவும் எளிதல்ல, கடினமே, இதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால், இந்த முறை நல்ல அணி உள்ளது, பேட்ஸ்மென்கள் அதிக ரன்களை எடுக்க முடிந்தால் பவுலர்கள் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையுடையவர்களே.
நேரடியாக டெஸ்ட்டில் களமிறங்குவது பிரச்சினையில்லை. கோலி, ரஹானே, புஜாரா, முரளி விஜய் ஆகியோர் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவில் ஆடிய அனுபவமிக்கவர்கள். மேலும் இவர்கள் இப்போது நல்ல மேம்பாடு அடைந்த பேட்ஸ்மென்களாக தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கின்றனர்.
இந்திய அணி பந்து வீச்சு தற்போது சிறப்பாக உள்ளது, ஆனால் அதற்காக அயல் மண்ணில் காலடி எடுத்து வைக்கும் சிறந்த வேகப்பந்து வீச்சு என்று அதற்குள் தீர்மானத்தை நோக்கி நாம் தாவ வேண்டியதில்லை.
இவ்வாறு கூறினார் கங்குலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT