Published : 11 Dec 2017 06:49 PM
Last Updated : 11 Dec 2017 06:49 PM
2023-ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. பிசிசிஐ இதனை சிறப்பு பொதுக்கூட்டத்தில் உறுதி செய்தது.
முதல் முறையாக முழுதும் இந்தியாவே ஏற்று நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட்டாகும் இது, இதற்கு முன்னதாக, நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா மற்ற நாட்டு வாரியங்களுடன் சேர்ந்தே நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 2023-ல் முதல்முறையாக தனித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. அதேபோல் 2021 சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இந்தியாவில் நடைபெறுகிறது.
இதோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதையடுத்து 2019-20-ல் ஆப்கானுடன் இந்திய அணி இங்கு டெஸ்டில் ஆடுகிறது.
அதே போல் 2019-23-ம் ஆண்டுகளில் இந்திய அணி 81 போட்டிகளில் உள்நாட்டில் ஆடுகிறது (அனைத்து வடிவங்களும் சேர்த்து), இது குறைக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, விளையாடும் நாட்கள் எண்ணிக்கை 306ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT