Published : 14 Nov 2017 10:22 AM
Last Updated : 14 Nov 2017 10:22 AM
நாக்ஸ்வில் சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பூரவ் ராஜா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி சுற்றில் லியாண்டர் பயஸ், பூரவ் ராஜா ஜோடி, அமெரிக்காவின் ஜேம்ஸ் செரிடானி, ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக் சுமித் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் பயஸ் ஜோடி 7-6 (7-4), 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பட்டம் வென்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பூரவ் ராஜாவுடன் இணைந்து லியாண்டர் பயஸ் விளையாடி வரும் நிலையில் முதல் முறையாக இந்த ஜோடி கோப்பையை கைப்பற்றி உள்ளது. இந்த சீசனில் லியாண்டர் பயஸ் ஏற்கெனவே சாலஞ்சர் போட்டிகளில் 3 முறை வெவ்வேறு ஜோடிகளுடன் பட்டம் வென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT