Published : 04 Nov 2017 09:44 AM
Last Updated : 04 Nov 2017 09:44 AM

ரஞ்சி கோப்பை தொடரில் ஒடிசாவுக்கு எதிராக மோதும் தமிழக அணி அறிவிப்பு

ரஞ்சி கோப்பை தொடரில் ஒடிசாவுக்கு எதிராக விளையாடும் தமிழக கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர் மலோலன் ரங்கராஜன், வேகப் பந்து வீச்சாளர் வி.லட்சுமண் இடம் பெற்றுள்ளளனர்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இந்த சீசனில் இதுவரை விளையாடி உள்ள 3 ஆட்டங்களையும் டிரா செய்து 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தமிழக அணி தனது 4-வது ஆட்டத்தில் வரும் 9-ம் தேதி ஒடிசாவுக்கு எதிராக மோதுகிறது. கட்டாக்கில் நடைபெறும் இந்த ஆட்டத்துக்கான தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தொடக்க வீரர் முரளி விஜய் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் தமிழக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மலோலன் ரங்கராஜன், வேகப் பந்து வீச்சாளர் வி.லட்சுமண் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். லட்சுமண் முதல் இரு ஆட்டங்களிலும் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய நிலையில் மும்பை அணிக்கு எதிராக கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த யோ மகேஷூம் அணியில் உள்ளார்.

அணி விவரம்: அபிநவ் முகுந்த் (கேப்டன்), பாபா இந்திரஜித், கவுசிக் காந்தி, பாபா அபராஜித், விஜய் சங்கர், ஜெகதீசன், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ரகில் ஷா, கே.விக்னேஷ், யோ மகேஷ், எல்.விக்னேஷ், ரோஹித், கங்கா ஸ்ரீதர் ராஜூ, மலோலன் ரங்கராஜன், வி.லட்சுமண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x