Published : 13 Nov 2017 09:50 AM
Last Updated : 13 Nov 2017 09:50 AM

தமிழ்நாடு பாட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு

தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கத் தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில், தமிழ்நாடு சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சங்கத் தலைவராக அன்புமணி ராமதாஸ் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சார்ந்த ஆண், பெண் இருபிரிவிலும் வாகையர் பட்டம் சூடியவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், “என்னை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு அனைத்து மாநில, மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றி. தமிழக பாட்மிண்டன் வீரர்களை இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் முதல் ஒலிம்பிக் போட்டி வரை பங்குபெறச் செய்து வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன்” என்றார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x