Last Updated : 21 Nov, 2017 03:16 PM

 

Published : 21 Nov 2017 03:16 PM
Last Updated : 21 Nov 2017 03:16 PM

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து புவனேஷ்வர் குமார், ஷிகர் தவண் விடுவிப்பு

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார், 2-வது இன்னிங்ஸில் 94 ரன்கள் விளாசிய ஷிகர் தவண் ஆகியோருக்கு இந்திய அணி நிர்வாகம் விடுப்பு அளித்துள்ளது.

புவனேஷ்வர் குமாருக்குத் திருமணம் என்பதாலும், ஷிகர் தவண் சொந்தக் காரணங்களுக்காகவும் விடுப்பு கோரியிருந்தனர், ஆகவே இவர்கள் இருவரையும் இந்திய டெஸ்ட் அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.

நவம்பர் 23-ம் தேதி புவனேஷ்வர் குமார் திருமணம் செய்து கொள்கிறார், எனவே அவர் இந்தத் தொடரில் மேலும் விளையாட மாட்டார் என்றும் ஷிகர் தவண் கடைசி டெஸ்ட் போட்டிக்குத் திரும்புவார் என்றும் பிசிசிஐ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து விஜய் சங்கர், “கனவு நிஜமானது” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவர் துலீப் கோப்பைப் போட்டியில் பாபா இந்திரஜித் இரட்டைச் சதம் அடித்த போது கடைசி விக்கெட்டுக்காக சாதனைக் கூட்டணியில் இணைந்து ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் அருமையாகப் பந்து வீசியதையடுத்து இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x