Published : 20 Jun 2023 08:27 AM
Last Updated : 20 Jun 2023 08:27 AM

இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு

இந்திய அணி வீரர்களுடன் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்

புவனேஷ்வர்: இன்டர்காண்டினென்டல் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 46-வது நிமிடத்திலும், லாலியன்ஷுவாலா ஷாங்க்டே 66-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x