திருவண்ணாமலையில் இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Updated on
1 min read

திருவண்ணாமலை: ​திரு​வண்​ணா​மலை அண்​ணாமலை​யார் கோயி​லில் நடை​பெறும் தீபத் திரு​விழாவையொட்டி இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்​சி​யில் மகா தீபம் ஏற்​றப்​படு​கிறது. இதை தரிசிக்க லட்​சக்​கணக்​கான பக்தர்கள் திரண்​டுள்​ளனர்.

பிரசித்திபெற்ற அண்​ணா​மலை​யார் கோயி​லில் கடந்த 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் கார்த்​திகை தீபத் திரு​விழா தொடங்​கியது. கடந்த 9 நாட்களாக காலை​யில் விநாயகர், சந்​திரசேகரரும், இரவு பஞ்ச மூர்த்​தி​களும் பல்​வேறு வாக​னங்​களி​லும் எழுந்​தருளி மாட வீதி​களில் பவனி வந்​தனர்.

விழா​வின் 10-ம் நாளான இன்று அதி​காலை பரணி தீப​மும், மாலை​யில் மகா தீப​மும் ஏற்​றப்​படு​கிறது. மகா தீபத்தை தரிசிக்க நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து சுமார் 40 லட்​சம் பக்​தர்​கள் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதையொட்டி அண்​ணா​மலை​யார் கோ​யில் மற்​றும் மாநகரில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. கோயில் வளாகம் வண்ண மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்படி, அண்​ணா​மலை​யார் கோ​யில் சுவாமி சந்​நி​தி​யில் இன்று அதி​காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்​றப்​பட்​டது.

மாலை 5 மணி​யள​வில் கோயில் 3-ம் பிர​காரத்​தில் உள்ள தீப தரிசன மண்​டபத்​தில் விநாயகர், வள்​ளி, தெய்​வானை சமதே முரு​கர், உண்​ணா​முலை​யம்​மன் சமேத அண்​ணா​மலை​யார், பராசக்தி அம்​மன், சண்​டிகேஸ்​வரர் ஆகியோர் எழுந்​தருளி அருள் பாலிக்கின்​றனர்.

பின்னர் மாலை 5.55 மணிக்கு அர்த்​த​நாரீஸ்​வரர் ஆனந்த தாண்​ட​வத்​துடன் கோயில் கொடிமரம் முன்பு எழுந்​தருளி பக்​தர்களுக்கு காட்​சி​யளிப்​பார். அப்​போது, கொடிமரம் முன்​புள்ள அகண்​டத்​தில் தீபம் ஏற்​றியதும், மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்​புறம் உள்ள 2,668 அடி உயர​முள்ள மலை உச்​சி​யில் மகா தீபம் ஏற்​றப்​படும்.

மகா தீபம் ஏற்​றப்பட உள்ள கொப்​பரை 5 அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்​டது. இந்​தக் கொப்​பரைக்கு நேற்று அதி​காலை கோயி​லில் சிறப்பு பூஜைசெய்​யப்​பட்​டு, பின்​னர் மலை உச்​சிக்கு கொண்டுச் செல்​லப்​பட்​டது. மேலும், தீபம் ஏற்​று​வதற்கு ஆயிரம் மீட்​டர் காடா துணி​யாலான திரியும், தீபம் எரிவதற்கு 3,000 கிலோ நெய்யும் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

இவையும் இன்று அதி​காலை மலை உச்​சிக்கு தனியாகக் கொண்டு செல்​லப்​படு​கின்​றன. மலை ஏற பக்​தர்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. கோயில் வளாகத்​தில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

காலை​யில் பரணி தீபத்​துக்கு 5 ஆயிரம் பக்​தர்​களும், மாலை​யில் மகா தீபத்​துக்கு 6 ஆயிரம் பக்​தர்​களும் கோயிலுக்​குள் அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். பொது தரிசனத்​துக்கு ராஜகோபுரம் வழி​யாக காலை 5.30 மணி முதல் 9 மணி வரை 20 ஆயிரம் பக்​தர்​கள் வரை கோயிலுக்குள் அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்.

தீபத் திரு​விழாவையொட்டி வடக்கு மண்டல ஐஜி அஸ்​ரா​கர்க் தலை​மை​யில், 6 டிஐஜி-க்கள், 29 எஸ்​பிக்​கள் உட்பட15 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபடுகின்றனர்.

<div class="paragraphs"><p>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 டிசம்பர் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in