Published : 14 Sep 2017 11:28 AM
Last Updated : 14 Sep 2017 11:28 AM

வார ராசிபலன் 14/09/2017 முதல் 20/09/2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும். புதிய வீடு, வாகனச் சேர்க்கை ஏற்படும். பணதேவை ஏற்பட்டாலும் அதைத் திறமையாகச் சமாளித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சாதுரியமாகச் சமாளிக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது.  குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பெண்கள் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாகச்  செயல்படவும். மாணவர்களுக்குக் கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு ஏற்றமான காலம் இது. அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்த மனத்தாங்கல்கள் அகலும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி;

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று அரளிப்பூ அர்ப்பணித்து வர இடர்பாடுகள் அகலும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சுகம் அதிகரிக்கும். வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். தொழில் ஸ்தானம் வலுப்பெறுவதால் தொழில், வியாபாரத்தில் இருந்த கடன்சுமை நீங்கும். பங்குதார்களுக்குள் இருந்து வந்த வேற்றுமை அகலும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வே இருக்காது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் உண்டாகலாம். பெண்கள் மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். மாணவர்கள் கவனத்தைச் சிதற விடலாம். கலைத்துறையினருக்குப் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். மேலிடத்தின் கருணை கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 2, 6

பரிகாரம்:  அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தாலும் ராசியைப் பார்க்கும் குருவாலும் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் எடுத்த காரியத்தை திறமையாகச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண்செலவு, உடல்நல பாதிப்பு ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிட ஆதரவு நீடிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: வடமேற்கு, வடக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 3, 5

பரிகாரம்:  புதனன்று லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலுள்ள ராகுவின் சஞ்சாரத்தால் வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேற்று மதத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல்  பொறுப்புகள் உண்டாகலாம்.

சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்த வேலையைச் சரியான நேரத்தில் முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். உறவினர்கள், அண்டைவீட்டாருடன் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மாணவர்களுக்குக் கல்வியில் சீரான போக்கு காணப்படும். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றிபெறும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 2, 3

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்பப் பிரச்சினை, தொழிற்பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகும். 

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருப்பதால் நல்ல பலன்கள் உண்டாகும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூரப் பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானப் போக்கு காணப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அதீத கவனம் தேவை. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களைச் சரி பார்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விழிப்புடன் பணிகளைக் கவனிப்பது நல்லது.

உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.  உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தடைகளைத் தாண்டி கல்வி கற்பதற்கான மாணவர்களின் முயற்சி வெற்றி பெறும். கலைத்துறையினருக்குக் குழப்பம் நீங்கும். அரசியலவாதிகளுக்குப் பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்:  தினமும் பைரவரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். 

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சஞ்சாரத்தால் எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் இருந்த தடங்கல்கள் அகலும். மனக்கவலை நீங்கி சந்தோஷம் உண்டாகும். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். சரக்குகளைக் கையாளும் போது கவனம் தேவை. உத்தியோக விஷயமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். 

குடும்பத்தினரால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பெண்களுக்குத் தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, நீலம் | எண்கள்: 5, 6

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வலம் வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x