Published : 01 Mar 2023 05:13 AM
Last Updated : 01 Mar 2023 05:13 AM

திருமலையில் தெப்போற்சவ திருவிழா

திருமலை: திருமலையில் மார்ச் மாதம் 3-ம்தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தெப்போற்சவம் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு இவ்விழா மார்ச் 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல்நாள் சீதா, ராமர், லட்சுமணரும், 2-வது நாள் ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணரும் பவனி வருவர். மீதமுள்ள 3 நாட்களும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தெப்போற்சவத்தை முன்னிட்டு மேற்கண்ட 5 நாட்களும் சில ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x