Published : 29 Aug 2019 05:27 PM
Last Updated : 29 Aug 2019 05:27 PM
வி.ராம்ஜி
வன்னி விநாயகரை வணங்கினால், சகல தோஷங்களையும் நீக்கி அருள்வார் விநாயகப் பெருமான்.
எந்தச் செயலைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் செயல்படத் தொடங்குவோம். அரச மரத்தடி துவங்கி, மிகப்பெரிய ஆலயத்தில் குடிகொண்டிருக்கிற பிள்ளையார் வரை... அவரை வணங்கிவிட்டுத்தான் சகல காரியங்களும் செய்வோம். ஆக, முதல் வணக்கமும் வழிபாடும் விநாயகருக்குத்தான்!
எந்த கணபதியை வணங்கினாலும் அவர் நமக்கு அருளை வாரி வழங்குவார். குறிப்பாக, வன்னிமரத்தடியில் உள்ள விநாயகரை வணங்கினால், உங்கள் வாழ்வில் சனி தோஷம் விலகும் சகல தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சங்கட ஹர சதுர்த்தி நாளில், விநாயக சதுர்த்தி நன்னாளில், உங்கள் வீட்டுக்கு அருகில் வன்னி மரத்தடி பிள்ளையார் இருந்தாலோ அல்லது வேறு எங்கேனும் வன்னி மரத்தடியில் இருந்தபடி பிள்ளையார் அருள்பாலித்து வருகிறார் என்றாலோ அங்கே சென்று அவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், 108 முறை பிராகார வலம் வாருங்கள். இயலாதவர்கள் மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொண்டாலே போதும். பின்னர், சிதறு காய் அடித்து பிரார்த்தனையை நிறைவு செய்யுங்கள்.
நினைத்த காரியத்தையும் நடத்தித் தந்தருள்வார். காரியத்தடைகளையெல்லாம் நீக்கி அருள்வார் பிள்ளையாரப்பன். .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT