Last Updated : 05 Mar, 2015 11:56 AM

 

Published : 05 Mar 2015 11:56 AM
Last Updated : 05 Mar 2015 11:56 AM

துவார பாலகர்கள் யார்?

சிவன் கோயில், பெருமாள் கோயில், அம்பாள் கோயில்களின் முகப்பில் துவார பாலகர்கள் வீற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆலயத்தின் உள்ளே பிரவேசிப்பதற்கு முன்பாக, துவார பாலகர்களை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

சிவன், பெருமாள் கோயில்களில் துவார பாலகர்கள் என்றும் அம்மன் கோயில்களின் முகப்பில் இருப்பவர்களை துவார பாலகிகள் என்றும் புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

சிவன் கோயில்களில் இருக்கும் துவார பாலகர்களின் பெயர் சண்டன், பிரசண்டன். மாகா விஷ்ணுவின் ஆலயங்களில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்கள் ஜயன், விஜயன். இவர்கள் ஒரு சாபத்தினால் மூன்று ஜென்மங்கள் அசுரர்களாகவே பிறந்தவர்கள். அதன் பின் துவார பாலகர்களாக திருமாலுக்குச் சேவை செய்துவருபவர்கள். அம்மன் கோயிலின் வாயிலில் காக்கும் துவார பாலகிகளின் பெயர், ஹரபத்ரா, சுபத்ரா.

கோயிலின் முகப்பில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்களின் சிலை இரண்டு விதங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஒன்று, சங்கு, சக்கர, கதாயுதத்துடன் ஆயுத பாணிகளாக துவார பாலகர்கள் காட்சி தருவார்கள்.

இன்னொன்று, நிராயுதபாணியாக, தன்னுடைய ஆட்காட்டி விரலை உயர்த்தியபடி ஒரு துவார பாலகர் நிற்பார். இறைவன் ஒருவனே என்பதுதான் இதன் தத்துவம்.

இன்னொரு பாலகர், தன்னுடைய கையை விரித்தபடி இருப்பார். இறைவனைத் தவிர வேறெதுவுமில்லை என்பதே இதன் தத்துவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x