Published : 03 Dec 2014 09:36 AM
Last Updated : 03 Dec 2014 09:36 AM
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கடந்த அக்டோபர் 16-ம் தேதி நீக்கியது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT