Published : 24 Aug 2017 12:53 PM
Last Updated : 24 Aug 2017 12:53 PM
ஜெ
ன் குரு ஒருவரின் வீட்டுக்குத் திருட வந்த கள்வனின் கதையை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். அந்த குரு, அவனைத் தடுக்காததோடு அவன் எடுக்க வேண்டிய பொருட்கள் எவையென்பதைக் காண்பிக்கவும் செய்தார்.
அந்தத் திருடனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவிதமான மனிதர் என்று நினைத்தான். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது ஜென் குரு, அந்தத் திருடனிடம் நன்றி கோரினார். திருடனும் நன்றி சொன்னான். மேலும் குழம்பிச் சென்றான்.
அடுத்த சில நாட்களில் திருடன் அரசவைக் காவலர்களிடம் ஜென் குருவின் குடிலில் இருந்த பொருட்களுடன் பிடிபட்டான். அரசவைக் காவலர்கள் ஜென் குருவிடம் திருடனை இழுத்து வந்தனர். பொருட்களை அவன் திருடவில்லை என்றும் தானே முன்வந்து கொடுத்ததாகவும் அதற்குத் திருடன் நன்றி சொன்னதையும் குறிப்பிட்டார்.
திருடனுக்கு விடுதலை கிடைத்தது. திருடன், ஜென் குருவுக்குப் பின்னாலேயே வந்தான். “என்னிடம் தற்போதைக்கு எதுவும் இல்லை. சில நாட்கள் கழித்து வா” என்றார் ஜென்குரு.
“நான் உங்களுடனேயே வரப்போகிறேன். நீங்கள் என் இதயத்தைத் திருடிவிட்டீர்கள்” என்றான் திருடன்.
நம்பிக்கையுள்ள மனிதனிடம் எதையுமே திருட முடியாது. எதையும் அவனால் ஏமாற்றமாக எண்ணவும் முடியாது. அவனது நேசம் எப்போதும் ஒன்றாகவே இருக்கும். அதன் ஓட்டம் அப்படியேதான் இருக்கும்.
விசுவாசம் என்பது மிகச் சிறந்த பண்பு. விசுவாசம் நிறைந்திருக்கும் மனிதன் சமயத்தன்மை வாய்ந்தவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT