Published : 04 Jul 2018 05:10 PM
Last Updated : 04 Jul 2018 05:10 PM
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களில் 62-வது திவ்ய தேசமாக விளங்கும் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் போகும் வழியில் 42-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.
மூலவர் ஆதிவராகப் பெருமாள் பூமிதேவி அம்சமான அகிலவல்லித் தாயாரை தமது இடதுபுறத்தில் ஏந்திக்கொண்டு ஒரு காலைப் பூமியிலும் மற்றொரு காலை ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசிலும் வைத்துக்கொண்டு கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, உலகத்தவருக்கு பிராட்டி மூலமாக சரம ஸ்லோகத்தை உபதேசிக்கின்ற ஆறரை அடி உயரத்தில் எழுந்து நிற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT