Published : 20 Dec 2017 03:40 PM
Last Updated : 20 Dec 2017 03:40 PM

வார ராசிபலன் 21/12/2017 முதல் 27/12/2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் தைரிய ஸ்தானத்துக்கு மாறுகிறார். குருவும் ராசிநாதனும் பரிவர்த்தனை யோகம் தருகிறார்கள். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும்.வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சினை நீங்கும்.நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியம் ஒன்று நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களது நிர்வாகத் திறமை வெளிப்படும்.

மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும்.அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். கலைத் துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை,மஞ்சள் | எண்கள்: 1, 3, 5

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க, கடன் பிரச்சினை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும்.

நண்பர்களுடன் ஏற்பட்ட பிரிவால் உடல்சோர்வு உண்டாகலாம். போட்டிகள் நீங்கி தொழில், வியாபாரங்கள் விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனத்துடன் பழகுவது நல்லது. பெண்கள், பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகள், எதிலும் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினர் எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: முருகனுக்குப் பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரகச் சேர்க்கைகள் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்கல், காரியங்களை துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையிரே, உங்கள் கவுரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளைத் துணிச்சலாக மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க, வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசிச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்துகொள்வது நன்மை தரும். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பயணங்களின்போதும் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம்.

எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்கள், கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத் துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்கள் திட்டமிட்டுப் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம் | எண்கள்: 5, 6

பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க, எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். குரு பார்வையுடன் ராசிநாதன் பார்வையும் விழுவது நன்மையைக் கொடுக்கும். மிக அருமையான நேரத்தை பயன்படுத்திக்கொள்வது நல்லது. அறிவு, திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம்.மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. குரு பார்வையின் பலனால் பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும்.  புத்திசாதூர்யம் அதிகரிக்கும்.வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது.

தொழில் வியாபாரம் லாபம் தரும். தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள், அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேற்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.  தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் நீங்கள் உண்டு உங்கள் படிப்பு உண்டு என்று இருப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 6

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க, எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். ராசிநாதன் எட்டாமிடத்தில் மறைந்திருந்தாலும் அவரது பார்வையால் அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும்.

புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகமான லாபம் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாகக் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் கூடும். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத் துறையில் இருப்பவர்கள் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்குச் செலவு அதிகரிக்கும்.  மாணவர்கள், கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது நன்மையைக் கொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x