Published : 04 Nov 2017 12:19 PM
Last Updated : 04 Nov 2017 12:19 PM

வார ராசிபலன் 02/11/2017 முதல் 08/11/2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எந்தக் காரியத்தையும் சிரத்தையுடனும் வேகத்துடனும் செய்வீர்கள். தேவையற்ற சஞ்சலம் அகலும். எதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பீர்கள். தனாதிபதி சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் உங்களுடைய பணத்தேவை பூர்த்தியாகும். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். வழக்குகளி மந்த நிலை மாறும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் புதிய உத்வேகம் பிறக்கும்.

வீண் இடையூறுகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்படும். பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கடன் விவகாரங்களில் யோசித்துச் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும்,

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நேர்மைத்தன்மை வெளிப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும்.  திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். தனாதிபதி புதன் சஞ்சாரம் பொருள் வரவைத் தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரப் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பங்குதாரர்களிடம் இருந்து வந்த உரசல்கள் அகலும். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்கள் திறமையாகச் சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். கலைத்துறையினர் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்குத் தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்குத் தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெண் மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளைத் தீபம் ஏற்றி வழிபட்டு வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெறுங்கள்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதனுக்கு மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்கள் அனுகூலம் தரும் வகையில் அமைந்துள்ளன. உங்கள் பேச்சாற்றல் மூலம் அனைத்துச் சிக்கல்களையும் சமாளிப்பீர்கள். வருவாயிலிருந்து ஒருபகுதியைச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும். நண்பர்கள் மூலம் தக்கத் தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். சுகஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் புதியதாக வீடு, மனை, வாகனச் சேர்க்கை ஏற்படும். செய்தொழிலில் மன நிம்மதியும் நன்மையும் உண்டாகும்.

மேலதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசம் நீங்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கைத்தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 5

பரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் ராகுவால் உங்களுடைய தயாளகுணம் வெளிப்படும். சுபச்செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்துச் செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாகப் பேசி பழகுவது நல்லது. வீடு கட்டுவதற்கான தடைகள் அகலும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.  அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்கள் கூறுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் பதற்றம் ஏற்படுத்துவதாக இருக்கும். பெண்கள் புதிய செயல்களில் யோசித்து ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் குறையும். மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்துச் செல்லவும். கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: சந்திரன், சுக்கிரன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் தடைபட்டிருந்த காரியங்கள் இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர்ப் பயணங்கள் உண்டாகும், நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் குருவுடன் சேர்ந்திருப்பது மனத்தெளிவை உண்டாக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும்.

சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்தினருக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு மனத்தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்குப் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவைச் செயல்படுத்துவதற்கு முன்னர் கலந்தாலோசிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். மாணவர்களின் திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: சிவனை வழிபட்டால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கோதுமைக் கஞ்சி செய்து பிரசாத விநியோகம் செய்வது நல்லது.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் செவ்வாய் இருப்பதால் பரிவர்த்தனை யோகம் இருக்கிறது. பணவரவு அதிகரிக்கும். விருப்பமானவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி, பந்தயங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் வாக்குவன்மை அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் செல்வதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சைக் கேட்டு நடப்பதைத் தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிக்கவும். பெண்களுக்கு பயம் நீங்கித் துணிவு உண்டாகும். கலைத்துறையினர் வெளிவட்டார பழக்கவழக்கங்களைக் குறைத்துக் கொள்ளவும். அரசியல்வாதிகள் எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. மாணவர்கள் கவனமாகப் பாடங்களைப் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைபட்ட காரியங்களில் தடைநீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x