Published : 05 Oct 2017 10:07 AM
Last Updated : 05 Oct 2017 10:07 AM

வார ராசிபலன் 05/10/2017 முதல் 11/10/2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ராசியில் மிகப் பலமாக இருக்கிறார். பொருளாதார நிலை உயரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மேலிடம் உங்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படுவதைத் தடுக்கும். பெண்களின் பொருளாதார நிலை உயரும். கலைத்துறையினர் தேவையான  பொருட்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் வீண் மனஸ்தாபத்தால் பாதிக்கப்படுவார்கள். துணிச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் சக மாணவர்களின் கருத்துக்களுடன் முரண்படாமல் அனுசரித்துச் செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், நீலம் | எண்கள்: 3, 4, 9

பரிகாரம்: தினமும் செவ்வரளி மாலை சாற்றி முருகனை வழிபட்டு வர மனதில் அமைதி மேலோங்கும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். நிதானமாக எதையும் செய்வது நல்லது. தூர தேசப் பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்குக் கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிக நேரம் வேலை செய்ய நேரும். குடும்பாதிபதி புதனின் சஞ்சாரத்தினால் மனநிறைவான சூழல் ஏற்படும்.

வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்கள் உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து  சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்ய வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதாரச் சிக்கல் தீரும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.  மனதில் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும்.

அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண்பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்லவும். உறவினர்கள், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பெண்களுக்குக் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் வீண் வழக்கு விவகாரங்களை எதிர்கொள்ளலாம். மாணவர்களது முயற்சிகளுக்குத் தாமதமாகப் பலன்கள் கிடைக்கும். கூடுதல் மதிப்பெண்  பெற அதிக நேரம் படிக்கவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: புதன்கிழமை அன்று பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். எந்த ஒரு வேலையைச் செய்து முடிப்பதிலும் இருந்த தடைகள் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு தேவைப்படும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்தில் கனிவைக் கடைபிடிக்கவும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் அடுத்தவர்கள் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரின் முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் மேல் அதிருப்தி ஏற்பட்டு பின்னர் நீங்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் சந்தேகம் தெளிவது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 2, 6

பரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். மனம் அமைதியடையும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாகச் செயல்படுவது வெற்றியை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். கூட்டுத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரும். மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பது நல்லது.

குடும்பத்தில் நிலவிய கருத்து வேற்றுமை நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் விவேகமாகச் செயல்படுவது வெற்றியைத் தரும். கலைத்துறையினர் எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதைக் கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 1, 6

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவன் கோயிலுக்குப் போய் சிவனையும் நவகிரகங்களில் சூரியனையும் தீபம் ஏற்றி வழிபடவும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை, தீமைகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தில் சுபம் உண்டாகும். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறிச் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும்.

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பெண்கள் எந்தக் காரியத்தையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் பேச்சுத் திறமையால் காரியங்களைச் சாதகமாக்குவீர்கள். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்குள் போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5, 6

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சனேயரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x