Last Updated : 25 Oct, 2015 02:14 PM

 

Published : 25 Oct 2015 02:14 PM
Last Updated : 25 Oct 2015 02:14 PM

தக்காளிப் பழ அல்வா

என்னென்ன தேவை?

தக்காளிப் பழம் - அரை கிலோ

சர்க்கரை - 2 கப்

நெய் - 1 கப்

ஜவ்வரிசி - 1 டேபிள் ஸ்பூன்

கோவா - 1 கப்

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 10

எப்படிச் செய்வது?

தக்காளிப் பழத்தை நன்றாகக் கழுவி, கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து, தோலை உரித்தெடுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரையுங்கள். ஜவ்வரிசியை ஊறவைத்து, வேகவையுங்கள். அடி கனமான வாணலியில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு சிறிது பால் சேருங்கள். கசடு மேலே வந்ததும் அதை நீக்கிவிட்டு, கம்பிப் பாகு பதம் வந்ததும் தக்காளிப் பழக் கூழைச் சேர்த்துக் கிளறுங்கள்.

நன்கு கொதித்து, கெட்டிப் பதம் வந்ததும், வெந்த ஜவ்வரிசியைச் சேர்த்துக் கிளறுங்கள். ஏலக்காய்த் தூள் தூவி, நெய்யில் முந்திரி பருப்பை வறுத்துச் சேர்த்து, இறக்கிவையுங்கள். பாதாம் பருப்பை ஊறவைத்து, தோலுரித்து, துருவி, தக்காளிப் பழ அல்வா மேல் தூவி, பரிமாறுங்கள். புளிப்பும் இனிப்பும் சேர்ந்த சுவையான தக்காளிப் பழ அல்வா தயார்.

உஷா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x