Last Updated : 28 Sep, 2015 12:32 PM

 

Published : 28 Sep 2015 12:32 PM
Last Updated : 28 Sep 2015 12:32 PM

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

என்னென்ன தேவை?

கொத்தவரங்காய் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப் கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - கால் கப்

பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பருப்பு வகையுடன் காய்ந்த மிளகாயைச் சேர்த்துக் கால் மணி நேரம் ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவையுங்கள். நறுக்கிவைத்திருக்கும் கொத்தவரங்காயை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளியுங்கள். பிறகு பெருங்காயத் தூள், வேகவைத்த காய்கறி, பருப்பு போட்டுக் கிளறி தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். விரும்பினால் மல்லித்தழை தூவலாம். சீசனுக்குத் தகுந்த மாதிரி பீன்ஸ், காராமணி காயிலும் இந்தப் பருப்பு உசிலியைச் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x