Published : 22 Sep 2014 05:10 PM
Last Updated : 22 Sep 2014 05:10 PM

அவல் பால் அல்வா

என்னென்ன தேவை?

அவல் - கால் கிலோ, பச்சரிசி - கால் கிலோ, தேங்காய் - 1, சர்க்கரை - அரை கிலோ, நெய் - கால் கிலோ, பால் - அரை லிட்டர், ஏலக்காய் - 5, முந்திரிப்பருப்பு - 10, உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

அவல், பச்சரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக ஊறவைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு, ஏலக்காயை நெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். பச்சரிசி, தேங்காய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மைய அரைக்கவும்.

அவல், பச்சரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக ஊறவைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு, ஏலக்காயை நெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். பச்சரிசி, தேங்காய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மைய அரைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிண்டவும். இந்தக் கரைசலில் அவலைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறவும்.

அத்துடன் பச்சரிசிக் கலவையைச் சேர்த்துக் கிளற வேண்டும். அரை வேக்காடு வந்தவுடன், நெய், முந்திரிப் பருப்பு, ஏலப்பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளற வேண்டும்.

கலவை அல்வா பதத்துக்கு வந்தவுடன் இறக்கி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி துண்டுதுண்டாக வெட்டவும். சுவை மிக்க அவல் பால் அல்வா தயார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x