Last Updated : 15 Oct, 2017 12:26 PM

 

Published : 15 Oct 2017 12:26 PM
Last Updated : 15 Oct 2017 12:26 PM

தீபாவளி நல்விருந்து! - நாட்டுக் கோழிக் குழம்பு

என்னென்ன தேவை?

நாட்டுக் கோழிக் கறி - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 20

இஞ்சி, பூண்டு விழுது

- ஒன்றரை டீஸ்பூன்

தக்காளி - 3

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க

மிளகாய் - 15

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

தனியா - ஒன்றரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணெய் - சிறிதளவு

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 2

அன்னாசிப்பூ - 2

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

கோழிக்கறியை தயிரில் ஊறவைத்துச் சுத்தம் செய்து குக்கரில் உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்துத் தண்ணீர் சேர்க்காமல் மூடி, ஐந்து விசில் விட்டு இறக்கிவையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்குங்கள். பிறகு இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தக்காளியைச் சேர்த்து வதக்குங்கள். வறுத்து அரைத்த மசலாவை அதில் சேருங்கள். குறைந்த தீயில் எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கிய பிறகு வேகவைத்திருக்கும் கறியைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும் மல்லித்தழை தூவி இறக்கிவிடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x