Published : 13 Apr 2023 03:46 PM
Last Updated : 13 Apr 2023 03:46 PM

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியீடு

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 14) ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘கண்ணை நம்பாதே’. கடந்த மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

க்ரைம் த்ரில்லராக உருவான இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருந்தார். வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்திருந்த இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டிருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் நாளை (ஏப்ரல் 14) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x