Published : 16 Sep 2017 12:18 PM
Last Updated : 16 Sep 2017 12:18 PM
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
பா.ஜீவசுந்தரி, எழுத்தாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்.
தினம் ஒரு இணைப்பிதழ், இணைப்பிதழ்தோறும் பல்வேறு தகவல்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட எந்தத் தரப்பையும் விட்டுவிடாமல் அனைத்துத் தரப்பையும் அரவணைத்துக்கொள்ளும் விதம் வெகு நேர்த்தி.
நடுப்பக்கக் கட்டுரைகள், நேர்காணல்கள் பலவும் என்னை ஈர்க்கின்றன. குறிப்பாக, மூத்த கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் நேர்காணல்.
வலைப்பதிவர்களின் கருத்துகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், வாசகர்களின் கருத்துகள் என அனைத்துமே குறிப்பிடப்பட வேண்டியவை.
சாதனை என்பதை உணராமலேயே சாதித்துக்கொண்டிருக்கும் சாமானியர்களைப் பற்றி ‘இங்கே… இவர்கள்… இப்படி…’ பகுதியில் வெளிவரும் கட்டுரைகள் பிரமிக்க வைக்கின்றன.
செய்திகளில் நடுநிலைமை மிகவும் அவசியம். எழுத்துப் பிழைகளும் சீர்செய்யப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT