Published : 23 Jul 2017 09:32 AM
Last Updated : 23 Jul 2017 09:32 AM

குட்கா, பான்பராக் விற்பனை: காவல் ஆணையரிடம் விக்கிரமராஜா மனு

குட்கா போன்ற போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறதோ அங்கேயே அதைக் கண்டறிந்து தடுத்து நிறுத்த வேண்டும் என காவல் ஆணையரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா மனு அளித்துள்ளார்.

காவல் ஆணையரிடம் நேற்று அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்பதை காவல்துறை கண்டறிந்து அதை அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும். இதன்மூலம் கீழ்மட்டத்தில் உள்ள வணிகர்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

குட்கா போன்ற பொருட்களை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என வணிகர்களுக்கு சிலர் ஆசை வார்த்தைகளைக் கூறி, கொடுத்து விடுகின்றனர். ஆனால், சிலர் ஆசை வார்த்தைகளை நம்பி இதுபோன்ற பொருட்களை விற்று மாட்டிக் கொள்கின்றனர்.

அவ்வாறு பிடிபடும் வியாபாரிகள் மீது சிறிய வழக்குகள் பதிவு செய்து எச்சரிக்கை செய்து அவர்களின் வாழ் வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x