Published : 24 Jul 2017 09:16 AM
Last Updated : 24 Jul 2017 09:16 AM
மயிலாப்பூரில் அடுத்தடுத்து 4 பெண்களின் செயின் பறிக்கப் பட்டது. செயின் பறித்ததாகக் கூறி 2 இளைஞர்களின் புகைப் படத்தை வெளியிட்டு போலீஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கி யுள்ளனர்.
பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த வர் ஜாக்குலின். இவர் நேற்று முன்தினம் அதே பகுதி யில் நடந்து சென்றபோது ஒரே பைக்கில் வந்த 2 இளைஞர்கள் ஜாக்குலின் அணிந்திருந்த 11 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து ராயப் பேட்டை அவ்வை சண்முகம் சாலையைச் சேர்ந்த பானுவிடம் 3 சவரன் நகையை அதே இளைஞர்கள் பறித்துச் சென்றனர். பின்னர், அபிராமபுரத்திலும் ஒரு பெண்ணிடம் நகை பறிப்புச் சம்பவம் அரங்கேறியது. அடுத் தடுத்து என 4 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் தலைமையிலான போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
முதல் கட்டமாக மயிலாப்பூரில் உள்ள பேக்ரி ஒன்றில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரித்தபோது சம்பந்தப் பட்ட இளைஞர்களின் புகைப்படம் தெளிவாக தெரிந்தது. அந்த புகைப்படம் தற்போது அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுப் பப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் இருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புகைப்படத்தில் இருக்கும் இளைஞர்கள் பிடிபட்டால் இவர்கள்தான் உண்மையான குற்றவாளிகளா அல்லது வேறு யாரேனுமா என தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT