Published : 22 Aug 2018 09:10 AM
Last Updated : 22 Aug 2018 09:10 AM
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங் களில் பெய்த மழைப்பொழிவின் அளவு குறைந்துள்ளதால் காவிரி யில் தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள் ளிட்ட பகுதிகளிலும், கபினி ஆறு உற்பத்தியாகும் வயநாட்டிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே யுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 பெரிய அணைகளும் கடந்த ஜூலை மாதமே நிரம்பின.
இதையடுத்து தமிழகத்துக்கு அதிகளவில் காவிரி நீர் திறக் கப்பட்டதால் மேட்டூர் அணையும் நிரம்பியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கர்நாடகா மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள் ளிட்ட அணைகள் நடப்பாண்டில் இரண்டாம் முறையாக நிரம்பின. எனவே அணைகளின் பாதுகாப்பை கருதி, காவிரியில் தமிழகத்துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது.இதனால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கரையோர கிராமங்கள் வெகுவாக பாதிக் கப்பட்டன.
இந்நிலையில் குடகு, மைசூரு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யவில்லை. எனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு விநாடிக்கு 2 லட்சம் அளவுக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு, நேற்று 90 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 121.62 அடியாக (மொத்த உயரம் 124.80 அடி) குறைந்துள்ளது.நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி நீர் வந்த நிலையில் நேற்று, அணைக்கு விநாடிக்கு 72 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 62 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணை யின் நீர்மட்டம் 2,281
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT